இவ்வோளோ பாசமா? மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்காக பிரபல இயக்குனர் செய்த செயல்!

  • மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்காக பிரபல இயக்குனர் செய்த செயல்.
  • சேதுவின் நற்குணத்தையும், செய்து வரும் நற்காரியங்களை நினைத்ததும் வரிகள் உள்ளத்தில் நெகிழ்ந்து அன்பாக நேசமாக கண நேரத்தில் வந்தது.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார். இவர் சினிமாவில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராக வளம் வருகிறார். இதனால் தான் இவர் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படுகிறார். இவர் தற்போது தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் பரிசாக, அவரை வாழ்த்தி இயக்குநர் சீனு ராமசாமி எழுதிய கவிதை பாடலாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் இதை எழுத பத்தாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால்எ ழுதியது என்னவோ அரை மணி நேரத்தில். சேதுவின் நற்குணத்தையும், செய்து வரும் நற்காரியங்களை நினைத்ததும் வரிகள் உள்ளத்தில் நெகிழ்ந்து அன்பாக நேசமாக கண நேரத்தில் வந்தது” என்று கூறியுள்ளார்.

இதோ அந்த கவிதை,

ரசிகனை ரசிக்கும்
ரசிகனே வாரசித்தவர் மனங்களின்
தலைவனே வா
இலக்கணம் எமக்கில்லை
என்றவன் வா
தலைக்கணம் தமக்கில்லை
உணர்ந்தவன் வா

மக்கள் செல்வா
உந்தன் மங்காதப் புகழ் சொல்லவா
மக்கள் செல்வா
இந்த மண்ணின் மகன் நீ அல்லவா

தர்மத்தின் தலைமகன்
தந்ததை மறப்பவன்
பெற்றதை நினைப்பவன்
பெருமைகள் சேர்ப்பவன்

பசித்தவர் அறிந்தே
தன் இரைப்பையில் இருந்தே
எடுத்து தருபவன்

உண்பதை தந்தான்
மிச்சத்தை உண்டான்
தன் மனம் அறிந்தான்
அவ மானம் கடந்தான்

திரையில் நடிப்பவன்
தரையில் நடப்பவன்
தாயை போலவன்
தந்தை குணத்தவன்

முயன்றவர் தோற்றவர்
தன்
தன்னுடன் இணைத்தே
வெற்றியை தந்தவன்

கலைதவம் செய்தான்
தன்னுழைபை விதைத்தான்
உள்ளத்தால் சிரித்தான்
எண்ணத்தால் உயர்ந்தான்

விஜய் சேதுபதி எனும்
மனிதா
விஜய் சேதுபதியே
மாமனிதா

-சீனு ராமசாமி

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.