அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிறதா? இப்படத்தின் கதாநாயகன் இவர்தானா ?

  • அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிறதா?
  • கதாநாயகன் இவர்தானா ?

சமீப காலமாக தமிழ் சினிமாவில் வெற்றி பெரும் திரைப்படங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் உருவாக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது. அஜித்குமாரின் பில்லா படமும் 2 பாகம் வந்துள்ளது. சூர்யாவின் சிங்கம் திரைப்படம் 3-ம் பாகம் வரை வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை திரைப்படம் வெற்றிபெற்றதையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. அதனை தொடர்ந்து, இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்திலேயே மூன்றாம் பக்கமும் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதாநாயகனாக ஆர்யாவும், இவருக்கு ஜோடியாக ராசி கண்ணாவும் நடிப்பதற்கு பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.