விஷாலின் இரும்புத்திரை-2 பற்றிய சூப்பர் அப்டேட்ஸ்!

விஷால் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற திரைப்படம் இரும்புத்திரை. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தை ஆனந்த் என்ற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ரெஜினா நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளதாகவும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் முழுக்க கோயம்புத்தூரை சுற்றி நடப்பதுபோல இருக்கும் என கூறப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் ஷூட்டிங் பற்றிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.