அன்பழகனின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு – அதிமுக இரங்கல்

உடல்நலக்குறைவு காரணமாக திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் மரணமடைந்துவிட்டார்.இந்நிலையில்  திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவிற்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

அதிமுக சார்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளனர்.