சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து பரவிய Covid-19 வைரஸ் தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதிலும் தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் Covid-19 வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ளது.சீனாவில் Covid-19 வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சீனா சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆனாலும் இந்த வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை குறையவில்லை அதிகரித்து கொண்டே செல்கிறது.சீனாவில் தற்போது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,835 ஆக அதிகரித்துள்ளது. 79,251 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.