#IPL2020: சதம் விளாசிய ஷிகர் தவான்.. டெல்லி அணி அபார வெற்றி..!

இன்றைய 34-வது போட்டியில் டெல்லி Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சாம் கரண், டு பிளெசிஸ்  இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் சாம் கரண் 2 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், ஷேன் வாட்சன் களமிறங்க நிதானமாக விளையாடி வந்த வாட்சன் 36 ரன் எடுத்து வெளியேறினார்.

அதிரடியாக விளையாடி வந்த டு பிளெசிஸ் அரைசதம் அடித்து 58 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து, களம் கண்டார்.  ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு  இருவரும் கூட்டணி அமைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கடைசிவரை களத்தில்  ரவீந்திர ஜடேஜா 33*, அம்பதி ராயுடு 45* ரன்களுடன் நின்றனர். இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணி 180 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், பிருத்வி ஷா களமிறங்க பிருத்வி ஷா ரன் எடுக்காமல் வெளியேறினார்.

பின்னர், இறங்கிய ரஹானே 8 , ஸ்ரேயாஸ் 23 ரன்கள் எடுத்து பெவிலியன் சென்றனர். இதைத்தொடர்ந்து, தொடக்க வீரராக களம் கண்ட ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தால் சதம் விளாசி 101 ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.

அதில், 14 பவுண்டரி , 1 சிக்ஸர் அடக்கும். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 185 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

 

 

author avatar
murugan