IPL 2018:பெங்களூருவில் குடும்பத்துடன் ஜாலியாக பயணம் செய்த “மிஸ்டர் 360”!

பெங்களூருவில் குடும்பத்துடன்,தென்னாப்பிரிக்க வீரரான ஏ.பி.டி வில்லியர்ஸ், ஆட்டோவில் பயணம் செய்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தவிர்க்க முடியாத அதிரடி ஆட்டக்காரராக டி வில்லியர்ஸ் உள்ளார். இவர் பெங்களூருவில் தனது மனைவி டேனியல்லே ((danielle)) மற்றும் மகன் ஆப்ரஹாமுடன் ஆட்டோவில் பயணித்தார். டி வில்லியர்சைக் கண்ட சில ரசிகர்கள் ஆட்டோவை பின் தொடர்ந்து வந்து வில்லியர்ஸூடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அவர்களிடம் பேசிய டி வில்லியர்ஸ், இந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பை பெங்களூரு அணிக்கு தான் என்று உற்சாகப்படுத்தினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment