IPL 2018:ஏன் இப்படி?இவ்ளோ நாள் எங்கிருந்தீங்க?பஞ்சாப்பை 88 ரன்களுக்குள் சுருட்டி,8.1 ஓவர்களில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களுரு அபார வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 15.1 ஓவர்களில் 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெங்களூரு அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் பார்தீவ் பட்டேல்-விராட் கோஹ்லி ஜோடி சிறப்பாக ஆடி 8.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

இதன்மூலம் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி 48 ரன்களுடனும், பார்த்திவ் பட்டேல் 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

 

Leave a Comment