ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ! சிதம்பத்தை இன்று விசாரிக்கிறது அமலாக்கத்துறை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ! சிதம்பத்தை இன்று விசாரிக்கிறது அமலாக்கத்துறை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பத்தை அமலாக்கத்துறை இன்று விசாரிக்கிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.இதனையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் உள்ள நிலையில் ப.சிதம்பரத்தை விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.இதனை தொடர்ந்து சிதம்பரம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.மேலும் தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது செய்யவும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது .இதனையடுத்து இன்று திகார் சிறையில் வைத்து சிதம்பரத்தை விசாரிக்கிறது அமலாக்கத்துறை.

Join our channel google news Youtube