ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ! அமலாக்கத்துறை மனு மீது நாளை உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய அமலாக்கத்துறை மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கிறது .
ப.சிதம்பரத்தை காவலில் விசாரிக்க அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.இதற்காக திகார் சிறையில் உள்ள சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அமலாக்கத்துறை  வழக்கில் நாளை மாலை 4 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்  என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.