நான் தப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை! – பா.சிதம்பரம் பதில்!

ஐஎன்எக்ஸ் நிறுவனம் முறைகேடு வழக்கு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சிபிஐ அதிகாரிகள் நான்கு முறைக்கு மேலாக பா.சிதம்பரம் வீட்டிற்கு சென்று அதிகாரிகள் சோதனை இட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் பா.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்பட்டுள்ளது.

இதில், பா.சிதம்பரத்தின் சார்பில், ‘ஐஎன்எக்ஸ் வழக்கில் நான் தப்பியோட அவசியம் இல்லை. அதே போல முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் சேர்க்கப்படாத போது, எப்படி எனது முன்ஜாமீன் மனுவை நிராகரிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.