ஐஎன்எக்ஸ் வழக்கு : சிறையில் உள்ள சிதம்பரத்திடம் விசாரணை

ஐஎன்எக்ஸ் வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில்  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை முதலில் சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.இதனைத்தொடர்ந்து  ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது.பின்னர் நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதற்கு இடையில் ஐ.என்.எக்ஸ். மீடியா தொடர்பான ஐ.என்.எக்ஸ். மீடியா சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது  வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சிறையில் உள்ள சிதம்பரத்திடம் 2 நாட்கள் விசாரிக்க அனுமதிகோரி அமலாக்கத்துறை சார்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.இதற்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.தற்போது  சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது.