சமூக வலைதளங்களில் வைரலாகும் திருப்பூர் சுப்பிரமணியன் கொடுத்த பேட்டி!தல அஜித் குரல் கொடுக்க வருவார் என ஆவேச பேச்சு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித்.இவர் எந்த ஒரு பப்ளிசிட்டியும் இல்லாத ஒரு நபர்.தான் உண்டு தான் வேலையுண்டு என்று இருப்பவர்.
ஆனால் தன் துறை சார்ந்த எந்த ஒரு பிரச்சனை என்றாலும் கண்டிப்பாக குரல் கொடுக்க வருவார்.அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் திருப்பூர் சுப்பிரமணியன் விரைவில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரையும் வைத்து  ஒரு கூட்டம் போடுவோம் என்று கூறியுள்ளார்.
மேலும் சில கோரிக்கைகளை அரசாங்கத்திடம் வைப்போம்,அதற்க்கு முன்னணி நடிகர்களையும் வரவழைப்போம் என்று கூறியுள்ளார்.
அப்போது நடிகர் அஜித்தையும் வரவழைப்பீர்களா?என்ற கேள்விக்கு அவர் கண்டிப்பாக வருவார்.அவரிடம் முறையான பிரச்சனையை கூறி அழைத்தால் கண்டிப்பாக வருவார் என கூறியுள்ளார்.