நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அதிமுக  வேட்பாளர்களுக்கான நேர்காணல்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அதிமுக  வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கியது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று முதல் விருப்பமனு தாக்கல் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில்  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அதிமுக  வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கியுள்ளது.நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ள 90 பேரிடம் அதிமுகவின் ஆட்சிமன்ற குழுவினர் நேர்காணல் நடத்துகின்றனர்