INDWvsSAW:தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்திய அணி ..!

இந்தியா பெண்கள் அணி  – தென்ஆப்பிரிக்கா பெண்கள்அணி இடையே 5-வது டி 20 போட்டி  நேற்று சூரத்தில் நடைபெற்றது. முதலில் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் 3 விக்கெட்டை வீழ்த்தினர். 99 ரன்கள் இலக்குடன் இறங்கிய இந்திய அணி 17.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் 34 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணி  3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இன்று மாலை 6-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது.

author avatar
murugan