INDvsWI: இந்திய வீரர்களின் வெறித்தனமான ஆட்டம்.! வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கதறல் .!

  • இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ,மற்றும் கே .எல் ராகுல் இருவரும் சதம் விளாசினார்.
  • இறுதியாக இந்திய அணி  50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 387 ரன்கள் குவித்தனர்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்ட் பந்து வீச முடிவு செய்தார். இதை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ,மற்றும் கே .எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினார்.

Image

பின்னர் இவர்களின் அதிரடி கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய ரோஹித் 34 ஓவரில் முதலில் சதம் விளாசினார்.இதை தொடர்ந்து 37 ஒவரில் கே . எல் ராகுல் சதம் விளாசினார். சதம் அடித்த அடுத்த இரண்டு பந்தில் கே.எல் ராகுல் அல்சாரி ஜோசப் வீசிய பந்தை சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தபோது ரோஸ்டன் சேஸ் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி முதல் பந்திலே ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.இதை தொடர்ந்து பின்னர் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும்
ரிஷாப் பண்ட இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் 53 , ரிஷாப் பண்ட 39 ரன்கள் குவித்தனர்.மத்தியில் இறங்கிய கேதார் ஜாதவ் 10 பந்திற்கு 16 ரன்கள் அடித்தார்.

Image

இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 387 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சார்பில் ஷெல்டன் கோட்ரெல் 2 விக்கெட்டை வீழ்த்தினார் .

author avatar
murugan