INDvsSA:மழையால் இன்றைய போட்டி கைவிடப்பட்டது..!

இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட்  போட்டி  இன்று விசாகப் பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்  தேர்வு செய்தது.அதன்படி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினார்.
இதில் இந்திய அணி 59.1 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 202 ரன்கள் அடித்து இருந்த போது  மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.தொடர்ந்து மழை பெய்ததாலும், மைதானத்தில் வெளிச்சம் குறைவாக இருந்ததாலும்  இன்றைய போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் காலத்தில் ரோகித் 115 ,அகர்வால் 84  ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றனர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

author avatar
murugan