INDvsSA:இந்திய அணி 502 ரன்னில் டிக்ளேர் செய்தது..!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டியை விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட்டை இழக்காமல் 202 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 136 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 502 ரன்கள் எடுத்த போது இந்திய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான மயங்க் அகர்வால் 215 , ரோகித்சர்மா 176 ரன்கள் அடித்தனர். இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி உள்ளது.

author avatar
murugan