நியூசி.,ஆல் அவுட்..!348 ரன்னில் சுருட்டியது இந்தியா..!

நியூசி.,ஆல் அவுட்..!348 ரன்னில் சுருட்டியது இந்தியா..!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.இந்த ஆட்டம் ஆனது வெல்லிங்கடனில் நடைபெற்று வருகிறது.அதன்படிமுதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்துநேற்றைய ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய ஆட்டம் தொடங்கியது.தொடக்கம் முதலே பும்ரா பந்தில் வாட்லிங் நடையை கட்டினார். பின் வந்த சவுதியும் 6 ரன்களில் வெளியேற கிராண்ட்ஹோமுடன் ஜோடி சேர்ந்த ஜேமிசன் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். பந்துக்களை சிக்ஸர்களாக பறக்கவிட்ட ஜேமிசன் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.மறுபக்கம் கிராண்ட்ஹோமும் 43 ரன்களில் நடையை கட்டினார்.

போல்ட் கடைசி நேரத்தில் பவுண்டரிகளை அடித்து நொறுக்க நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றது. போல்ட் 38 ரன்களில் ஆட்டமிழந்து நியூசிலாந்து ஆல் அவுட் ஆகி 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 183 ரன்கள் முன்னிலை பெற்று நியூசிலாந்து உள்ளது.

author avatar
kavitha
Join our channel google news Youtube