காமன்வெல்த் போட்டியில் 3வது இடத்தில் முன்னேறியுள்ளது இந்தியா!!

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடும் போட்டியில், தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஐந்தாவது நாளான இன்று, ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடும் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ஜித்துராய் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இதேபிரிவில், மற்றொரு இந்திய வீரரான ஓம் மித்தர்வால் வெண்கலப் பதக்கம் வென்றார்.

105 கிலோ பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் பர்தீப் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலத்துடன், பதக்கப்பட்டியலில் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment