காட்டடி அடித்த ஹிட்மேன் மற்றும் கிங் கோலி..!ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்த இந்திய அணி.!

  • இந்திய அணி 47.3 ஓவரில் 289 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2- 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இன்று 3-வது ஒரு நாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களம் கண்ட ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் பின்ச் சரியான தொடக்கத்தை அமைக்காமல் வார்னர் 3 ,பின்ச் 19 ரன்களிலும் வெளியேறினார்கள்.இதன் பின்பு வந்த ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் அடித்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் சமி 4,ஜடேஜா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். இதனையடுத்து 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார்.

ஆட்டம் தொடக்கத்திலேயே கே.எல் ராகுல் 19 ரன்களுடன் வெளியேற பின்னர் இந்த கேப்டன் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் கைகோர்த்து அணியின் எண்ணிக்கையை  உயர்த்தினர்.

இவர்களின் கூட்டணியை பிரிக்கமுடியாமல் ஆஸ்திரேலிய அணி திணறியது .அதிரடியாக விளையாடிய விளையாடிய ரோகித் சர்மா சதம் விளாசினார்.இவர்கள் இருவரின் கூட்டணியில் 140  ரன்கள் மேல் அடித்தனர். பின்னர் ரோகித் சர்மா 119 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதைத்தொடர்ந்து நிதானமாக விளையாடிய கேப்டன் கோலி அரைசதம் அடித்து 89 ரன்கள் குவித்தார். பின்னர் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர்44 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.இறுதியாக இந்திய அணி 47.3 ஓவரில் 289 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2- 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

author avatar
murugan