தடை முடிந்ததால் மனைவிகளுடன் ஊரை சுற்றி வரும் இந்திய அணி வீரர்கள்!வெளியான புகைப்படம் !

உலகக்கோப்பை தொடர் வெகு விமர்ச்சியாக இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோதியது .அப்போட்டியில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி நான்கு போட்டிகள் விளையாடி உள்ளது. அதில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.ஒரு போட்டி மழையால் ரத்தானது.இதனால் 7 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் இந்திய அணி உள்ளது.

நாளை மறுநாள் இந்தியா , ஆப்கானிஸ்தான் அணி உடன் மோத உள்ளது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் அணியுடன் மோதிய பிறகு இந்திய அணிக்கு அடுத்த போட்டிக்கு விளையாட அதிக நாள்கள் இருந்ததால் இந்திய அணி வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் ஊரை சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பிசிசிஐ இந்திய அணி வீரர்களுக்கு ஒரு கட்டுப்பாட்டையும் விதித்தது. உலகக்கோப்பை தொடங்கிய முதல் 20 நாள்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து வரக்கூடாது என அறிவித்தது.தற்போது 20 நாள்கள் முடிந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ,ரோஹித் சர்மா ,தவான் ஆகியோர் தங்கள் மனைவிகளுடன் ஊரை சுற்றி வருகின்றனர்.
https://www.instagram.com/p/By0UFwKH6Ks/?utm_source=ig_web_copy_link
அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் 15  நாள்கள் மட்டுமே இவர்கள் தங்கள் குடும்பத்துடன் இருக்க அனுமதி என பிசிசிஐ கூறியுள்ளது.
 

author avatar
murugan