இந்திய பிரதமர் மோடி டெல்லியில் டெல்லியில் தேசிய தூய்மை மையத்தை தொடங்கி வைத்தார்!

இந்திய பிரதமர் மோடி டெல்லியில் டெல்லியில் தேசிய தூய்மை மையத்தை தொடங்கி வைத்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார்.  இந்த திட்டத்தால், இந்தியாவில் 55 கோடிக்கும் அதிகமான மக்கள், திறந்த வெளியைக் கழிப்பறையாக உபயோகிக்கும் போக்கை விடுத்து, கழிப்பறைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு மாறியுள்ளனர்.

இந்நிலையில் தூய்மை இந்தியா குறித்து நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் கலந்துரையாடிய நிலையில், ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா என்ற தேசிய தூய்மை மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.