இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திட்டம்! உஷார் நிலையில் ராணுவம்!

காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதிலிருந்து காஷ்மீர் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. காரணம், காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது பாகிஸ்தானுக்கு பிடிக்கவில்லை. இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது, காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி இருப்பதாக, காஷ்மீர் ஆளுநர் தகவல் அளித்துள்ளார். மேலும், எல்லை தாண்டிய தாக்குதலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தற்போது இதனை மீண்டும் உறுதிபடுத்தும் விதமாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் தான் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ராணுவ படை, விமான படை உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.