கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 1 கோடி நிதியுதவி அளித்த இந்திய ஹாக்கி அணியினர்.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக பிரதமர் மோடி, பிரதமர் பேரிடர் நிவாரண திட்டத்திற்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்யலாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து, பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவந்தனர். 

இந்நிலையில், இந்திய ஹாக்கி அணியினர் இன்று 75 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிவாரண நிதி திட்டத்திற்கு கொடுத்தனர். இதற்கு முன்னர் ஏப்ரல் 1ஆம் தேதி 25 லட்சம் நியியுதவியை இந்திய ஹாக்கி அணி சார்பாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய ஹாக்கி அணி சார்பாக 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.