இந்திய பொருளாதாரம் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது-மோடி .!

 இந்தியாவில் கொரோனாவால் 5194 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும்  தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் 21 நாள்கள் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால் இன்று பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டம் போன்ற பல மக்கள் பிரதிநிதிகள், வல்லுநர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பல  மாநில அரசுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் வருகின்ற 11-ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

 ஒவ்வொருவர் உயிரையும் காப்பாற்றுவதே இப்போது அரசின் முன்னுரிமைப் பணியாக உள்ளது.தற்போதைய நிலையில் நாம் பணிபுரியும் நிலையிலேயே மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கொரோனாவால் நாட்டின் நிதி ஆதாரங்களும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன . இந்திய பொருளாதாரம் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது என மோடி தெரிவித்துள்ளார்.

 

 

author avatar
murugan