நீதிபதி வருத்தம் ! மதம் மற்றும் சாதிவாரியாக நாடு பிரிந்து கிடக்கிறது…

மதம் மற்றும் சாதிவாரியாக நாடு பிரிந்து கிடப்பதாகவும், கள்ளத்துப்பாக்கிகள் தமிழகம் மற்றும் அல்ல தேசத்தின் பிரச்சினை என நீதிபதி கிருபாகரன் பகிரங்க   கருத்து.
தமிழகத்தில் கள்ளத்துபாக்கி தொடர்பான வழக்குகளை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் கார்மேகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மதம் மற்றும் சாதிவாரியாக நாடு பிரிந்து கிடப்பதாகவும், கள்ளத்துப்பாக்கிகள் தமிழகம் மற்றும் அல்ல தேசத்தின் பிரச்சினை என நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கு விசாரணை பிப்ரவரி 16ம் தேதி ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment