- இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடந்த 2வது டி20 போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி தொடரை இழந்துள்ளது.
- இங்கிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது
இந்திய மகளிர் மற்றும் இங்கிலாந்து மாநிலங்களுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இன்று கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இறங்கியது இந்திய அணி.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் தேர்வு செய்தாலும் இந்திய வீராங்கனைகளால் பெரிதாக ரன் அடிக்க முடியவில்லை. அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனை தொடர்ந்து எளிதான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி 19.1 ஓவர்களில் 115 ரன்கள் விளாசி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்துள்ளது இந்திய மகளிர் அணி.