INDvSL : டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

  • இன்று 2-வது போட்டி மத்தியபிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடைபெறுகிறது.
  • இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது.

இலங்கை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட வந்து உள்ளனர்.இந்த தொடரின் முதல் நேற்று முன்தினம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற இருந்தது.மழை காரணமாக போட்டி பந்து வீசாமல் ரத்து என அறிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து இன்று 2-வது போட்டி மத்தியபிரதேசம் மாநிலத்தில் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்து  உள்ளார்.

இந்திய அணி வீரர்கள்:

ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷார்துல் தாகூர், நவ்தீப் சைனி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

இலங்கை அணி வீரர்கள்:

தனுஷ்கா குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), ஓஷாதா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானகா, இசுரு உதனா, வாணிந்து ஹசரங்கா, லஹிரு குமாரா, லசித் மலிங்கா (கேப்டன்)ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.