36 ஆண்டுகளுக்குப் பின் வெண்கலம் வென்ற இந்தியா…!

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி பேசில் நகரில் நடைபெற்று வருகிறது.  ஆண்களுக்கு நேற்று அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சாய் பிரனீத் மற்றும் ஜப்பான் வீரர் கென்டோ மொமோடா உடன் மோதினார்.

இப்போட்டி ஆட்டம் தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடிய ஜப்பான் வீரர் கென்டோ மொமோடா முதல் செட்டில் 21 -13 என்ற கணக்கில் வென்றா.ர் பின்னர் இரண்டாவது செட்டில் 21 -8 என்ற கணக்கில் இந்திய வீரர் சாய் பிரனீத்தை வீழ்த்தினார்.

கடந்த 1983-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் பிரகாஷ் படுகோன் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தார். அதன் பின்னர் 36 வருடங்கள் கழித்து அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கம் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய வீரர் சாய் பிரனீத் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக  வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார்.

author avatar
murugan