இந்திய கடற்படையின் புதிய தளபதியாக பதவியேற்றார் கரம்பீர் சிங் !

இந்திய கடற்படையின் தளபதியாக இருந்த சுனில் லன்பாவின் பதிவிக்கலாம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 24-வது புதிய கடற்படைத் தளபதியாக கரம்பீர் சிங் அவர்கள் இன்று காலை பதவியேற்றார்.

இந்திய கடற்படையை அபார வளர்ச்சிக்கு கொண்டு சென்ற இதற்கு முன் இருந்த கடற்படை தளபதிகள் போன்று என்னுடைய பங்கும் இன்றியமையாததாய் இருக்கும் என்று கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.  இவருக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி வழங்கப்படவில்லை என்று வைஸ் அட்மிரல் பிமல் வர்மா தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் கரம்பீர் சிங் பதவியேற்றார் என்பது குறிப்பிடப்பட்டது.

Leave a Comment