மிகச்சிறந்த சுனாமி முன்னெச்சரிக்கை தொழில்நுட்பம் இந்தியாவில் உள்ளது – மத்திய அமைச்சர்

மிகச்சிறந்த சுனாமி முன்னெச்சரிக்கை தொழில்நுட்பம் இந்தியாவில் உள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
கடல்சார் தொழில்நுட்ப கழகத்தின் வெள்ளி விழா நடைபெற்றது.இந்த விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பங்கேற்றார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் கடல்சார் தொழில்நுட்ப கழகத்தின் பங்கு மகத்தானது .உலகில் மிகச்சிறந்த சுனாமி முன்னெச்சரிக்கை தொழில்நுட்பம் இந்தியாவில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.