10 டன் மருந்து பொருட்களை இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பிய இந்திய அரசு.!

10 டன் மருந்து பொருட்களை இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பிய இந்திய அரசு.!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தடுக்க அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. இதனால் உலக அளவில், முக கவசம், சானிடைசர்கள், மருந்து பொருட்கள் என பலவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. 

இதனை அடுத்து, அமெரிக்காவுக்கு ஹைடிராக்சி குளுரோகுயின் மருந்து உட்பட, பல நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையையும் இந்திய அரசு நீக்கியது. 

தற்போது இந்திய அரசு சார்பில் 10 டன்  மருந்து பொருட்களை ஏர் இந்தியா விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளது. மேலும், அவசர காலங்களில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு துணை நிற்கும் எனவும் இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையம் மூலம் அறிவித்துள்ளதாம். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube