இந்தியா-சீனா-ரஷ்யா.. முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது!

எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டாதநிலையில், நேற்று இருநாட்டு ராணுவ கமாண்டர்களுக்கிடையில் இரண்டாவது முறையாக  பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்டு படைகளை விலக்கிக் கொள்வதற்கான நடைமுறைகள் தொடர்ந்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா, சீனா, ரஷ்யா இடையான முத்தரப்பு பேச்சுவார்த்தை, தற்பொழுது காணொளி மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா தரப்பில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.