மீண்டும் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல்.!

மீண்டும் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல்.!

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டுக்குள்ளே, பாலகோட் பகுதிக்குள் இந்திய விமானப்படை விமானங்கள் பாய்ந்து சென்று குண்டு வீசி தீவிரவாத முகாம்களை அழித்து விட்டு திரும்பி வந்தன. இதையடுத்து இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்த முற்பட்டது. அதை இந்திய விமானப்படை சிறப்பாக கையாண்டு விரட்டியடித்தது. இந்த நிலையில், இந்திய ராணுவம் தற்போது பாகிஸ்தானுக்கு மற்றொரு அதிர்ச்சியை அளித்துள்ளது. 

அதாவது ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா செக்டார் பகுதியில், பீரங்கி குண்டுகளை பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறி வைத்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம், அவ்வப்போது ஜம்மு-காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவ வீரர்கள் மீதும், இந்திய மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, எங்கே இருந்து தாக்குதல் தொடுக்கப்படுகிறதோ, அந்தப் பகுதியை குறிவைத்து இந்தியா இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube