“இந்தியா , பாகிஸ்தான் பேச்சுவார்த்தை” பிரதமர் வலியுறுத்தல்..!!

தீவிரவாதம் குறித்துப் பேச பாகிஸ்தான் தயாராக இருக்கிறது, இம்ரான் கான்

Image result for "இந்தியா , பாகிஸ்தான்
புது டெல்லி ,

பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றிருக்கும் இம்ரான் கான், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘இரு நாட்டுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இம்ரான் கான் எழுதிய கடிதத்தில், ‘இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தீவிரவாதம் குறித்துப் பேச பாகிஸ்தான் தயாராகவே இருக்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிகவும் சவாலான உறவு நிலவி வருகிறது. ஆனால், நம் மக்களுக்காகவும் எதிர்கால சந்ததிகளுக்காகவும், அமைதியான முறையில் நமக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளை போக்கிக் கொள்ள வேண்டும். ஜம்மூ – காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட அனைத்தையும் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். இரு நாட்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை கலைந்து சுமுகமான முடிவை எட்ட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment