73வது சுதந்திர தினத்திற்காக காவல்துறை அணிவகுப்பு கடைசிநாள் ஒத்திகை!

73வது சுதந்திர தினத்திற்காக காவல்துறை அணிவகுப்பு கடைசிநாள் ஒத்திகை!

நாளை மறுநாள் நாடு முழுவதும் 73வது சுதந்திர தினவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர்  சென்னை கோட்டை கொத்தளத்தில் கோடி ஏற்ற உள்ளார். இந்த நிகழ்வின் போது காவல்துறையினரின் அணி வகுப்பும் நடைபெறும்.

இதற்கான ஒத்திகை ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல், நடைபெற்று வருகிறது. இன்று ஒத்திகைக்கான கடைசி நாளாகும் . இந்த அணிவகுப்பு ஒத்திகையில் காவல்துறை, குதிரைப்படை, தீயணைப்பு துறை வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதனால் சென்னை காமராஜ் சாலையில் ஒத்திகை நடந்த நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube