Ind vs Sa : 10 பந்தில் 5 சிக்ஸ் யுமேஷ் யாதவ் அதிரடி

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணி ஆரம்பத்தில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. இதன் பின் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ரஹானே நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாட தொடங்கினர். இதில் ரோகித் சர்மா இரட்டை சதம்(212) மற்றும் ரஹானே சதம் (115) விளாசி அணியை நிலைமையை மாற்றினர்.

இதன் பின் களமிறங்கிய ஜடேஜா அரைசதம் (51) விளாசினார். இதன் பின் களமிறங்கிய யுமேஷ் யாதவ் 10 பந்தில் 31 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 சிக்ஸ் விளாசியுள்ளார். இறுதியில் இந்திய அணி 497 ரன்கள் குவித்து டிக்ளேர் அளிவித்தனர். தென்னாப்பிரிக்கா அணியின் அறிமுக வீரரான ஜார்ஜ் லிண்டே ஓவரில் தான் யுமேஷ் யாதவ் சிக்ஸ் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Vidhusan