வேலூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

வேலூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

வேலூரில் வருமான வரித்துறை நடத்திய  சோதனையில் ரொக்கமாக  பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது.

ஆனால் தமிழகத்தில் மட்டும் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று,வேட்புமனு  பரிசீலனையும் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனால்  தமிழகத்தை பொருத்தவரை ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பிரதான கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தது. வேட்புமனு பரிசீலனையும் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

எனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் ஆணையம் அதன் பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றது.குறிப்பாக பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது.

அதேபோல் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் சோதனை நடத்தினார்கள். பின்னர் துரைமுருகன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.10.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும்  தெரிவித்தனர்.

இந்நிலையில்  இன்று வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை  வருவதாக தெரிவிக்கப்பட்டது.அதுபோல்  காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

Image result for வருமான வரித்துறை

இந்நிலையில் வேலூரில் வருமான வரித்துறை நடத்திய  சோதனையில் ரொக்கமாக  பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் சிமெண்ட் குடோனில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அந்த சோதனையில் கட்டு கட்டாக  மூட்டைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது .மேலும்  மதிப்பு ரூ.10 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல்  பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி நடைபெறுவதாக வருமானவரித் துறை  தகவல் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *