தூத்துக்குடியில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் துவங்கப்படும் -அமைச்சர் அறிவிப்பு

தூத்துக்குடியில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்  துவங்கப்படும் என்று அமைச்சர்  உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். 

2020-2021 ம் ஆண்டிற்கான கால்நடை பராமரிப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.இதில் கால்நடைத்துறை அமைச்சர்  உடுமலை ராதாகிருஷ்ணன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவரது அறிவிப்பில்,தூத்துக்குடியில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்  துவங்கப்படும்.சென்னை காட்டுப்பாக்கத்தில்  சிவப்பு செம்மறியாடு உள்ளீட்டு மையம் துவங்கப்படும்.தென்காசியில் ரூ.2.70 கோடியில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் எந்த அச்சமுமின்றி கோழிக்கறியை உண்ணலாம் என்றும் தெரிவித்துள்ளார்.