தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…!சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் , தமிழகம் மற்றம் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரனமாகவும் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Image result for சென்னை வானிலை

சென்னையில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.அதேபோல் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

அதேபோல் சென்னை, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, விருதுநகர், தூத்துக்குடியில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Leave a Comment