பிற மாநிலங்களில் தமிழை 3வது பயிற்று மொழியாக்க வேண்டும்-பிரதமருக்கு முதலமைச்சர் பழனிச்சாமி கோரிக்கை

பிற மாநிலங்களில் தமிழை 3வது பயிற்று மொழியாக்க வேண்டும்-பிரதமருக்கு முதலமைச்சர் பழனிச்சாமி கோரிக்கை

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இதில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்தது.
இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் மட்டும் அல்லாது சில வட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் தமிழகத்தில் 3 வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் திருத்தப்பட்ட வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.மேலும்  இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கம் செய்தது மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் .


இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.அதில்,பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக மாணவர்கள் கற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தமிழை பிற மாநில கல்வித்திட்டத்தில் விருப்ப மொழியாக்குவது பழமையான மொழிக்கு செய்யும் மிகப்பெரிய சேவையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
 

Join our channel google news Youtube