குடும்ப தகராறின் போது போதையில் மர்மஉறுப்பு வெட்டுப்பட்டு இளைஞர் பலி..!

குடும்ப தகராறின் போது போதையில் மர்மஉறுப்பு வெட்டுப்பட்டு இளைஞர் பலி..!

சென்னை அயனாவரத்தில் உள்ள கூலித்தொழிலாளி மனோகர்(28).இவரது மனைவி சரிதா(23) என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துள்ளார். ஆனால் சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனோகர் மது குடித்துவிட்டு சரிதாவை அடிக்கடி அடித்தும் , துன்புறுத்தியும் வந்துள்ளார்.
சரிதா அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விடுவார். இந்நிலையில் சரிதா தனது தாய் வீட்டில் இருந்தபோது நள்ளிரவு 12 மணிக்கு குடித்துவிட்டு மனோகர் வந்துள்ளார். அப்போது அவர் அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளார். உடனே உறவினர் ராகவேந்திரன் வந்து தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட மனோகர் இடுப்பில்  மறைத்து வைத்திருந்த கத்தியை எடுக்க முயன்றபோது அவரது ஆணுறுப்பு மற்றும் வயிற்றில் கத்தி கிழித்தது.
பின்னர் கத்தியை எடுத்து ராகவேந்திரரை மனோகர் குத்தியுள்ளார். இதை தொடர்ந்து காயமடைந்த இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். ஆனால் அதிக ரத்தம் வெளியேறியதால் மனோகர் இறந்து விட்டார்.  காயமடைந்த ராகவேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube