முக்கிய அறிவிப்பு வெளியாகுமா.? சற்று நேரத்தில் பிரதமர் மோடி உரை.!

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார்.

 நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று இரவு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

இந்த உரையில் கொரோனா தடுப்பு குறித்தும்  ஊரடங்கு நீடிப்பதா.? இல்லை தளர்வு செய்யப்படுவாதா.? போன்ற முக்கிய அறிவிப்பை அறிவிக்க வாய்ப்பு இருக்கலாம்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk