#IPL2020: பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்.. பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறுமா பஞ்சாப்?

#IPL2020: பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்.. பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறுமா பஞ்சாப்?

ஐபிஎல் தொடரின் 50 ஆம் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் தற்பொழுது பிளே-ஆப்ஸ் சுற்று தொடங்கவுக்க நிலையில், அதற்காக அனைத்து அணிகளும் கடினமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், இன்று நடைபெறு ம் 50 ஆம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளது.

அபுதாபியில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். பிளே-ஆப்ஸ் சுற்றில் தகுதிபெறவேண்டும் என்ற ஒரே நோக்குடன் பஞ்சாப் அணி அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றிபெற்று வருவதால், இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

விளையாடும் வீரர்களின் விபரம்:

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மந்தீப் சிங், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், க்ளென் மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, கிறிஸ் ஜார்டன், முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர், ரியான் பராக், ராகுல் திவேத்தியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன், கார்த்திக் தியாகி.

Join our channel google news Youtube