இலங்கை அகதிகள் முகாமில் குழந்தைகள் தினவிழா..!!!

நாளை குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி இலங்கை அகதிகள் முகாமில், மாலை நேரப் பள்ளி மாணவ மாணவியருக்கு அங்குள்ள மாலை நேரப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் அங்குள்ள மாணவ, மாணவிகள் மிகவும் உற்சாகமாய் கலந்துகொண்டனர். இதனையடுத்து, விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நாளை மாலை 6 மணியளவில் மாப்பிள்ளையூரணி இலங்கை அகதிகள் முகாமில் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment