தப்பு பண்றவங்களுக்கு சரியான தண்டனை கொடுத்தால், தப்பு நடக்காது : நடிகை பூர்ணா

தப்பு பண்றவங்களுக்கு சரியான தண்டனை கொடுத்தால், தப்பு நடக்காது : நடிகை பூர்ணா

நடிகை பூர்ணா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை பூர்ணா ஒரு பேட்டியின் போது, சினிமாவில் நடிப்பேன். ஹீரோயின் ஆவேன் என்று எல்லாம் நான் நினைத்ததே  இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், அரசாங்கம் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக சொன்னாலும், எங்கு சென்றாலும் நமக்கு துணைக்கு ஒருவரை கூட்டிக் கொண்டு தான் செல்ல வேண்டி உள்ளது.

மேலும், பெண்கள் விஷயத்தில் தப்பு பண்றவங்களுக்கு சரியான தண்டனை கொடுத்தால், தவறுகள் நடக்காது. குற்றங்கள் குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *