விரைவில் கருவளையம் குறைய தினமும் இதை செய்தால் போதும்.!

விரைவில் கருவளையம் குறைய தினமும் இதை செய்தால் போதும்.!

கண்களில் காணப்படும்  கருவளையம் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை. கருவளையங்கள் உருவாவதற்கு முக்கிய காரணமே வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் இல்லாதது, இதனால்  கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன .

இந்த கருவளையம் வருவதால் முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இதை எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன்

உருளைக்கிழங்கு சாறு

தக்காளி சாறு

விட்டமின் E கேப்ஸ்யூல்-2

ரோஸ் வாட்டர்

பயன்படுத்தும் முறை:

முதலில் கற்றாழை ஜெல்லில் கால் ஸ்பூன், உருளைக்கிழங்கு சாறு மற்றும் தக்காளி சாற்றை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் கேப்ஸ்யூல் இரண்டு உடைத்து சேர்த்துக் கொள்ளவும் பின்னர் ரோஸ் வாட்டருடன் நன்றாக கலக்கி கொள்ளவும்.

பின்னர் கலந்து இந்த கலவையை தினமும் இரவு 20 நிமிடங்கள் ஊறவைத்து. பின்னர் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவவும் இப்படி செய்து வந்தால் மூன்று நாள்களில் கருவளையம்  குறைவது தெரியும்.

 

 

author avatar
murugan
Join our channel google news Youtube