ஒரே நாடு ஒரே அட்டை திட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு பண சுமை ஏற்படும்-எ.வ. வேலு

தமிழக சட்டப்பேரவை இன்று நடைபெற்றது.இதில் ஒரே நாடு ஒரே அட்டை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்  கொண்டு வந்தார் திமுக சட்டமன்ற  உறுப்பினர் எ.வ. வேலு . அதன் பின்னர் அவர் பேசுகையில்,ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு உள்ளது.

ஒரே நாடு ஒரே அட்டை திட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு பண சுமை ஏற்படும். பொது விநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியாது என்று திமுக சட்டமன்ற  உறுப்பினர் எ.வ. வேலு பேசினார்.