இடைத்தேர்தலில் திருவாரூரில் போட்டி…!. திருவாரூரில் எனக்குத்தான் எல்லோருமே ஆதரவு தருவார்கள்…!மு.க.அழகிரி அதிரடி

என்னுடைய ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டால் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னாள்  திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

Image result for மு.க.அழகிரி ஸ்டாலின்

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.பொருளாளராக துரைமுருகனும்,முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.அதேபோல் செப்டம்பர் 5 ஆம் தேதியும் பேரணி ஒன்றையும் அறிவித்தார்.அதில் 1 லட்சம் தொண்டர்களுக்கு கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.ஆனால் அவர் நினைத்தது போல் தொண்டர்கள் என்ணிக்கை இல்லை.இதன் பின்னரும் தனது பேட்டியை குறைத்து வந்தார்.அது மட்டும் அல்லாமல் கட்சியில் சேர்க்க வலியுறுத்தியும் ஒரு சில பேட்டிகளில் தெரிவித்தார்.

Image result for மு.க.அழகிரி ஸ்டாலின்

இந்நிலையில் தற்போது மு.க.அழகிரி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் ,இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் திருவாரூரில் போட்டியிடுவது  பற்றி பார்க்கலாம். என்னுடைய ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டால் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவேன். திருவாரூரில் எனக்கு எல்லோருமே ஆதரவு தருவார்கள்.அதேபோல்  தற்போது அரசியல் எங்கு நடக்கிறது.போராட்டம் தான் நடக்கிறது .கருணாநிதியின் கொள்கைகளை என்றும் பின்பற்றுவேன், என்னை பாஜக இயக்குவதாக கூறுவது வதந்தி என்றும் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

Leave a Comment